×

செவிலியரிடம் செயின் பறிப்பு

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே பவுஞ்சூர் பஜார் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கீதா (34). ஜமீன் எண்டத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு தனது மொபட்டில் பணிக்கு செல்லும் கீதா, மாலை 6 மணியளவில் வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து கீதா, தனது மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார். வெளிக்காடு கிராமம் அருகே சென்றபோது, அவரை பைக்கில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், திடீரென கீதாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றனர். இதனால், பயந்துபோன கீதா, உடனே மொபட்டை நிறுத்தினார். மர்மநபர்கள், தங்களது பைக்கை நிறுத்தி, கீதாவை சரமாரியாக தாக்கி, தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கீதா, அணைக்கட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post செவிலியரிடம் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Chain ,Seyyur ,Pounjoor Bazar ,Chengalpattu district ,Geeta ,Zameen… ,Dinakaran ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்...